» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காவல் துணை கண்காணிப்பாளர்கள் பணி நிறைவு: எஸ்பி வாழ்த்து

வியாழன் 1, மே 2025 10:49:21 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் பணி ஓய்வுபெற்றுள்ள 2 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் வாழ்த்து தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு-II காவல் துணை கண்காணிப்பாளர் சிவராஜ்பிள்ளை மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் சந்தனக்குமார் ஆகிய இருவரும் நேற்று பணி ஓய்வு பெற்றனர். மேற்படி இருவரும் 1988 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்து சிறப்பாக பணிபுரிந்து பதவி உயர்வுகள் பெற்று பணி ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பொன்னாடை போர்த்தி பரிசு வழங்கி பணி நிறைவு வாழ்த்து தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன், மாவட்ட குற்றப்பிரிவு-I காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory