» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து: ஐ.டி.ஐ. மாணவர் பலி!

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:32 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே சாலையில் நாய் குறுக்கே வந்ததால் நிலைதடுமாறிய பைக் மரத்தில் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ.மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் நடுவக்குறிச்சியை சேர்ந்த ஆறுமுககனி மகன் முத்துராஜ் (20). இவர், தூத்துக்குடியில் உள்ள அரசு தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் வேலாயுதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அவர் மோட்டார் சைக்கிளில் ெசன்றார். 

அந்த நிகழ்ச்சி முடிந்த நிலையில் மீண்டும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி கொண்டு இருந்தார். சில்லாநத்தம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடியுள்ளது. இதில் நாய் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றுள்ளார். இதில் நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு கம்பியில் உரசிய நிலையில், அருகில் இருந்த மரத்தில் மோதியது. 

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சைரஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory