» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட கோரிக்கை: ஆயர் தலைமையில் உண்ணாவிரதம்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 11:34:38 AM (IST)

புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.
புனித வெள்ளி அன்று தமிழ் நாடு முழுவதும் மதுகடைகளை மூட வலியுறுத்தி பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை போதை நோய் நலப்பணிக்குழு சார்பில் தூத்துக்குடியில் திரு இருதய போராலயம் (சின்ன கோயில்) வளாகத்தில் வைத்து தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் தலைமையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. அதிமுக மாநில வர்த்தக அணி செயலளார் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து காெண்டு உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் ஆயர் இவான் அம்புரோஸ், மறை மாவட்ட முதன்மை குரு ரவி காலன், மறை மாவட்ட செயலாளர் ஆண்றனி ஜெகதீசன், பொருளாளர் பிரதீப், சிஇஎப்ஐ தேசிய பொதுச் செயலாளர் ஸ்டீபன், அகில இந்திய ஜனநாயக சிறுபான்மை மக்கள் உரிமைத் தலைவர், ஜெயராஜ், சபைகளின் மாமன்ற தலைவர் ஆயர் ஜஸ்டஸ், பொதுச் செயலாளர் சாம் செல்வராஜ், துணைத் தலைவர் சாமுவேல் மோசஸ், பிஷப் கால்டுவெல் கல்லூரி முன்னாள் தாளாளர் ஜெபனேஷர் மங்களராஜ், அன்னை பரதர் நல தலைமைச் சங்கம் தலைவர் சேவியர் வாஸ், பொதுச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் காஸ்ட்ரோ, அவைத்தலைவர் ஞாயம் ரொமால்ட், துணைத் தலைவர் ஹாட்லி, ஜெயந்தர ராஜ், செயலாளர் ராஜா போஸ் ரீகன், நிர்வாக செயலாளர் ஆர்தர் மச்சாது, செயற்குழு உறுப்பினர்கள் ஜெகன், பெப்பின் மிஸியர் உட்பட பங்கு மக்கள், சங்கங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மக்கள் கருத்து
தெரியாமல் திமுகவுக்கு ஓட்டு போட்டு ஏமாந்தவன்Apr 10, 2025 - 01:42:57 PM | Posted IP 172.7*****
திமுக காரனை காணோம், ஒளிந்து இருந்து வேடிக்கை பார்க்கிறார்கள்??
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)











உண்மை விளம்பிApr 11, 2025 - 09:58:26 PM | Posted IP 162.1*****