» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாப பலி

வியாழன் 10, ஏப்ரல் 2025 8:56:58 AM (IST)

பேய்க்குளம் அருகே வயலில் தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், பேய்க்குளம் அருகே உள்ள வசவப்பநேரியை சேர்ந்தவர் பெருமாள் மகன் செல்வகுமார். இவர்  தனது வயலில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று மாலை சென்றுள்ளார். வயலில் மின்வாரியத்திற்கு சொந்தமான மின் வயர் அறுந்து கிடந்துள்ளது.

அறுந்து கிடந்த மின் வயரை தெரியாமல் செல்வகுமார் மிதித்ததனால் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து சேரகுளம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு உண்டாக்கி உள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory