» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம்!

வியாழன் 10, ஏப்ரல் 2025 11:24:56 AM (IST)



தூத்துக்குடியில் மின் கம்பம் மீது பைக் மோதிய விபத்தில் 2 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனால் மின்கம்பம் சரிந்து பஜார் பகுதியில் சுமார் 6 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.

தூத்துக்குடி கால்டுவெல் காலனி 6வது தெருவைச் சேர்ந்தவர் ரவிராஜ் மகன் விக்னேஷ்வரன் (18), சுந்தரவேல்புரம் 9வது தெருவைச் சேர்ந்த மரிய தொம்மை மகன் அனீஷ் (18). இவர்கள் இருவரும் நண்பர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதியுள்ளனர். தற்போது பகுதி நேரமாக பெயிண்டிங் வேலைக்கு சென்று வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று இரவு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடையில் பெயிண்டிங் வேலைக்கு சென்றுள்னர். இன்று காலை 3 மணியளவில் வேலை முடிந்து இருவரும் தனித் தனி பைக்கில் வந்து கொண்டிருந்தனர். சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது விக்னேஷ்வரன் பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அனீஷ், பதற்றத்தில் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. 

இவ்விபத்தில் படுகாயம் அடைந்த 2பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே பைக் மோதிய வேகத்தில் மின்கம்பம் சரிந்தது. இதனால் சிவன் கோவில் தெரு, ரங்கநாதபுரம், 2வது கேட் டபிள்யூஜிசி ரோடு, உள்ளிட்ட பஜார் பகுதிகளில் சுமார் 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து மத்தியபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory