» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!

வியாழன் 10, ஏப்ரல் 2025 12:02:03 PM (IST)



டாஸ்மாக் பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தூத்துக்குடியில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

21 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், பணி பாதுகாப்பு கோரியும், டாஸ்மாக்கில் மாற்றுத்திறனாளி பணியாளர்ளுக்கு பிறதுறையில் வழங்கும் சலுகைகள் வழங்கிட கோரியும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் சிதம்பரம் நகர், பஸ்நிறுத்தம் அருகில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் மரகதலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயல்தலைவர் முருகன் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆர்ப்பாட்ட உரையாற்றினார். முன்னாள் பொதுச் செயலாளர் கு.கணேசன், நாம் தமிழர் கட்சி  மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் ரவி, மாடசாமி, ஆவுடையப்பன், செண்பகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory