» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் இடி மின்னலுடன் கோடை மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:03:54 AM (IST)

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் முழுவதும் பரவலாக மழை பெய்தது. சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெளியில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு வெயில் வாட்டி வதைத்தது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடியில் நேற்று மாலை முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. மேலும் இரவு முழுவதும் நீடித்த சாரல் மழையால், சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இந்த மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். . 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory