» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தடுப்பணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி: நண்பர்களுடன் குளித்தபோது சோகம்!

புதன் 16, ஏப்ரல் 2025 8:32:03 AM (IST)

ஏரல் அருகே தாமிரபரணி தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி வட்ட கோவில் சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவரது மகன் விஜய் (21). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேதியியல் இறுதியாண்டு படித்து வந்தார். சசிகுமார் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அவரது தாயார் பராமரிப்பில் அவர் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் விஜய் அவரது நண்பர்கள் 6 பேருடன் ஏரல் அருகே உள்ள வாழவல்லான் தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை பகுதிக்கு வந்தார். அந்த தடுப்பணையில் நண்பர்களுடன் ஜாலியாக விளையாடி குளித்து கொண்டிருந்துள்ளார். நீச்சல் தெரியாத நிலையில் திடீரென அவர் ஆழமான பகுதிக்கு சென்ற அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.

அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி மிக ஆழமான பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக நண்பர்கள் கரைக்கு திரும்பி அக்கம் பக்கத்தினர் மூலம் அவரை மீட்க முயற்சித்துள்ளனர். இதற்கிடையில் தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில், ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகு மூலம் பல மணி நேரம் தேடிய நிலையில், மாலை 6 மணிக்கு அவரது உடலை கைப்பற்றி வெளியே கொண்டு வந்தனர். அப்போது அங்கிருந்த நண்பர்கள் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து அந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த தடுப்பணை பகுதியில் வெளியூரில் இருந்து ஏராளமானோர் குளிப்பதற்காக வருகின்றனர். இதில் அவ்வப்போது சிலர் தடுப்பணை தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளிக்க போக கூடாது என போலீசார் எச்சரிக்கை பலகையுடன் பேரிகார்டும் அமைத்துள்ளனர். அதையும் தாண்டி பொதுமக்கள் குளித்து விபரீதத்தில் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க இப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

M.sathish kumarApr 16, 2025 - 09:33:32 AM | Posted IP 162.1*****

Rip da thambi

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory