» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போதை பொருள் வைத்திருந்தவருக்கு 14 ஆண்டு சிறை : மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 16, ஏப்ரல் 2025 8:24:37 AM (IST)
தூத்துக்குடியில் போதை பொருள் வைத்து இருந்தவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தூத்துக்குடி போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி கடந்த 25.07.2018 அன்று அப்போதைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி மற்றும் போலீசார் தூத்துக்குடி மணல் தெருவில் உள்ள ஜெயரீஷ் என்பவர் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 8.840 கிலோ கஞ்சா எண்ணெய், 9.146 கிலோ சாரஸ் ஆகிய போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி போதைபொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயரீஷ், அசோக் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மதுரை முதலாவது கூடுதல் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருள் கடத்தல் தடுப்பு வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணையின் போது அசோக் தலைமறைவாக இருந்ததால் வழக்கு இரண்டாக பிரித்து விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி ஜெயரீஷ் மீதான விசாரணை கடந்த 26.03.24 அன்று முடிக்கப்பட்டு 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அசோக் கடந்த 13.11.2024 அன்று கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிஹரகுமார், குற்றம் சாட்டப்பட்ட அசோக்குக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










