» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

வியாழன் 3, ஏப்ரல் 2025 5:51:55 PM (IST)



கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கம் மற்றும் சிவா மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் வழக்கறிஞர் சங்கம் அலுவலகத்தில் நடைபெற்றது.

முகாமிற்கு கோவில்பட்டி வழக்கறிஞர் சங்க தலைவர் சங்கர் கணேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் ரேவதி,துணைத் தலைவர் சிவனுபாண்டி, துணைச் செயலாளர் முனீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மருத்துவ முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்தி தொடங்கி வைத்தார். முகாமில் சார்பு நீதிபதி மாரிக்காளை,முனிசீப் நீதிபதி கருப்பசாமி,விரைவு நீதிமன்ற நீதிபதி பாஸ்கரன்,குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை செல்வன்,பீட்டர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

மருத்துவர்கள் சிவ நாராயணன், சஞ்சய், ஆத்மிகா ஆகியோர் கலந்து கொண்டு எலும்பு சிகிச்சை மற்றும் மகளிர்களுக்கான சிகிச்சை அளித்தனர். அரசு வழக்கறிஞர் சம்பத்குமார், வழக்கறிஞர்கள் ஆழ்வார்சாமி, சிவக்குமார், போஸ் என்ற ஐயப்பன்,ரெங்கராஜன் மணிகண்டன், நாகராஜன், சந்திரசேகர், ராதாகிருஷ்ணன், மாரிக்கண்ணன், வளவன்,பாரதி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital





New Shape Tailors




Thoothukudi Business Directory