» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ஏப்.5ல் மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்

வியாழன் 3, ஏப்ரல் 2025 3:17:45 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 5ஆம் தேதி (சனிக்கிழமை) மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக தாத்துக்குடி நகர் (விநியோகம்) செயற்பொறியாளர் லெ.சின்னத்துரை வெளியிட்ட செய்திக்குறிப்பில் : தூத்துக்குடி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட செயற்பொறியாளர் நகர் கோட்டம் மற்றும் செயற்பொறியாளர் ஊரகக் கோட்ட அலுவலக வளாகத்தில் 05.04.2025 சனிக்கிழமை காலை 11.00மணி முதல் மாலை 05.00மணி வரை சிறப்பு முகாம் (Special Camp) நடைபெறவுள்ளது. 

இம்முகாமில் குறைந்த மின் அழுத்தம், பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த மின் அளவிகள், மின்சார கட்டண கணக்கீட்டில் உள்ள குறைகள் மற்றும் மின்துறை சம்மந்தமான குறைகள் அனைத்தையும் மின்நுகர்வோர்கள் புகார் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை சரிசெய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் தங்களது குறைகளை மேற்கண்ட முகாமில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors



CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory