» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குட்கா, பான் மசாலா கடத்தி வந்த டீக்கடைக்காரர் கைது

வியாழன் 3, ஏப்ரல் 2025 11:00:48 AM (IST)

தூத்துக்குடியில் இரு சக்கர வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்த டீக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடியில், மதுரை பைபாஸ் ரோடு ஸ்டெர்லைட் பாலம் அருகில் சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்  சைரஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 5.75 கிலோ கணேஷ் புகையிலை, 975  கிராம் விமல் பான் மசாலா இருப்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அந்த வாகனத்தில் வந்தவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவை சேர்ந்த சுந்தர் மகன் அண்ணாதுரை (52) என்பதும், இவர் மீள விட்டானில் டீக்கடை நடத்தி வருவதும் அங்கு வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அண்ணாதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education







Thoothukudi Business Directory