» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காட்டு பகுதியில் வாலிபர் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

வியாழன் 3, ஏப்ரல் 2025 8:15:18 AM (IST)

கழுகுமலை அருகே காட்டு பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை - கயத்தாறு சாலையில் பாண்டி கோவில் அருகே மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள காட்டு பகுதியில் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் விரைந்து சென்று அந்த உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில் அவர், கழுகுமலை அருகே உள்ள நாயக்கர்பட்டி மாடசாமி மகன் காளிதாஸ் (33) என்பது தெரிய வந்தது. 

திருமணமாகாத இவர், டவர் லைன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததுள்ளார். இறந்து சுமார் 4 நாட்களுக்கு மேல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து கழுகுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital



CSC Computer Education



Thoothukudi Business Directory