» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் : வழக்கறிஞர்கள் சங்கம் அறிவிப்பு

புதன் 2, ஏப்ரல் 2025 9:12:57 PM (IST)

தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பியை கண்டித்து மேலும் 2 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு, மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு தீர்மானத்தின்படி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் உறுதி செய்யப்படாத நிலையில் ஏப்.3, மற்றும் 4ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

நாளை (ஏப்.3) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு தலைமையில் நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க  04.04.2025 வெள்ளிக்கிழமை பகல் 01.00 மணிக்கு மீண்டும்  பொதுக்குழு கூட்டம்  சங்கத்தில் வைத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




CSC Computer Education


New Shape Tailors



Thoothukudi Business Directory