» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
புதன் 2, ஏப்ரல் 2025 8:07:24 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சி, சமூகம், மதம், சங்கம் சார்ந்த அனைத்து கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேற்காணும் நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (02.04.2025) அனைத்து அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் சார்ந்த அமைப்புகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவினை நடைமுறைப்படுத்தும் வகையில், வருவாய், ஊரக வளர்ச்சி, மாநகராட்சி மற்றும் நகராட்சி நிர்வாகம், அனைத்து பேரூரட்சிகள், இந்து சமய அறநிலையத்துறை, நெடுஞ்சாலை, நீர்வளம், பொதுப்பணித்துறை, வனம், போக்குவரத்து மற்றும் பிற துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடி மற்றும் கொடிக்கம்பங்களை அந்தந்த அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் அமைப்பு நிர்வாகிகள் 10.04.2025 தேதிக்குள் தங்கள் சொந்த செலவில், எவ்வித சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத வகையில் அகற்றிட கேட்டுக் கொள்ளப்பட்டது.
மேலும் நீதிமன்றத்திற்கு இவ்வினம் தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டி இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம், மதம், சங்கம் அமைப்பு நிர்வாகிகள் ஒத்துழைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் அறிவிப்பு
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 7:52:42 PM (IST)

முகநூலில் அறிமுகமாகி ரூ.34 லட்சம் மோசடி: கேரள தம்பதி கைது!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:59:00 PM (IST)

தூத்துக்குடி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி: மற்றொருவர் படுகாயம்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 5:51:30 PM (IST)

தூத்துக்குடி - வேளாங்கண்ணி பேருந்து சேவை : அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:45:30 PM (IST)

ஆத்தூரில் புதிய பேருந்து சேவை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:30:12 PM (IST)

நடப்போம் நலம் பெறுவோம் நடைபயிற்சி: ஆட்சியர் க.இளம்பகவத் தொடங்கி வைத்து பங்கேற்றார்
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 1:25:08 PM (IST)
