» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: மாணவ, மாணவிகள் பங்கேற்க அழைப்பு!
திங்கள் 10, பிப்ரவரி 2025 4:45:54 PM (IST)
இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சி.முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "அனைத்துலக அஞ்சல் ஒன்றியம்(UPU) ஒன்பது முதல் பதினைந்து (9-15) வயதுடைய இளம் தலைமுறையினர் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் கடிதங்களை எழுதி அற்புதமான பரிசுகளை வெல்ல ஊக்குவித்து வருகிறது.
இந்த 2025-ம் ஆண்டிற்கான கருப்பொருள் "உங்களை கடலாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களை ஏன், எப்படி நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை ஒருவருக்கு கடிதமாக எழுதுங்கள்”. கடிதம் ஆங்கிலம்/ இந்தி/ தமிழ் அல்லது நமது இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள இந்திய அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மொழியில் மேற்கண்ட தலைப்பில் 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதலாம்.
கையால் எழுதப்பட்ட கடிதங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கடிதத்தை முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம், சென்னை 600002 என்ற முகவரிக்கு எழுதப்பட்டு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், தூத்துக்குடி 628001 என்ற முகவரிக்கு உங்கள் பள்ளி மூலமாக அனுப்ப வேண்டும். சிறப்பான முதல் மூன்று கடிதங்கள் தமிழ்நாடு வட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் இந்திய அளவில் முதல் சிறந்த மூன்று கடிதங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.
இந்த போட்டியில் வெற்றி பரிசுத்தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.10 ஆயிரமும் மூன்றாம் பரிசு 5 ஆயிரம் வழங்கப்படும். தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3 ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.
முதல் இடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் கடிதம் இந்தியா சார்பில் சர்வதேச அளவிலான போட்டிக்கு அனுப்பப்படும். பின்னர் உலக அளவில் முதல் இடம் பெறும் கடிதத்தை எழுதிய பங்கேற்பாளர் சுவிட்சர்லாந்தில் உள்ள அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்படுவர். மேலும் விபரங்களுக்கு வணிக மேலாளரை 9942693129 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தூத்துக்குடி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) சி.முருகன் தெரிவித்து உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி நீதிமன்றத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு!
வெள்ளி 14, மார்ச் 2025 10:31:13 AM (IST)

டெலஸ்கோப்பில் பௌர்ணமி நிலவு, கோள்களை கண்டு வியந்த பொதுமக்கள்!
வெள்ளி 14, மார்ச் 2025 10:25:53 AM (IST)

ஏரல் ஆற்றுப்பாலத்தில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் : ஆட்சியர் இளம்பகவத் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 8:40:45 AM (IST)

பள்ளி, கல்லூரிகளில் சாதி மோதலை தடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்
வெள்ளி 14, மார்ச் 2025 8:35:36 AM (IST)

மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 8:24:52 AM (IST)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா நிறைவு!
வெள்ளி 14, மார்ச் 2025 8:21:01 AM (IST)
