» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை : போலீஸ் விசாரணை

திங்கள் 10, பிப்ரவரி 2025 10:27:21 AM (IST)

தூத்துக்குடி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூர், கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லம் மனைவி கனி (38). இந்த தம்பதிக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கனிக்கு 2018 ஆம் ஆண்டு வயிற்றில் புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வயிறு வலிப்பதாக கூறி சாப்பிடாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர் வீட்டின் கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு கணவன் மற்றும் பிள்ளைகள் வந்து பார்த்த பொழுது எரிந்த நிலையில் விழுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் (பொ) சைரஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory