» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் மீது அரசு பஸ் மோதல்: நிலபுரோக்கர் சாவு
திங்கள் 10, பிப்ரவரி 2025 8:17:20 AM (IST)
கயத்தாறில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த நிலபுரோக்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சன்முகையா மகன் கந்தசாமி (50). இவர் சம்பவத்தன்று காலையில் கயத்தாறில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன கந்தசாமிக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் பத்ரகாளி(29) சங்கீதா(27) ஆகிய 2 மகள்களும் கலைச்செல்வன்(28) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்றம் முன்பு அல்வா கொடுக்கும் போராட்டம் : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 4:58:09 PM (IST)

மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
வெள்ளி 14, மார்ச் 2025 4:55:27 PM (IST)

சொத்து வரியை மார்ச் 31க்குள் செலுத்த வேண்டும் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 14, மார்ச் 2025 12:57:01 PM (IST)

தாமிரபரணி மேம்பாடு, அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு : முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்பு!
வெள்ளி 14, மார்ச் 2025 12:43:38 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழாய்வு : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெள்ளி 14, மார்ச் 2025 12:34:58 PM (IST)

தூத்துக்குடியில் ஏதேனியா செக்கு எண்ணெய் விற்பனை நிலையம் துவக்க விழா!
வெள்ளி 14, மார்ச் 2025 11:32:15 AM (IST)
