» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது அரசு பஸ் மோதல்: நிலபுரோக்கர் சாவு

திங்கள் 10, பிப்ரவரி 2025 8:17:20 AM (IST)

கயத்தாறில் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காயமடைந்த நிலபுரோக்கர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த சன்முகையா மகன் கந்தசாமி (50). இவர் சம்பவத்தன்று காலையில் கயத்தாறில் இருந்து நெல்லை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்துபோன கந்தசாமிக்கு மாரியம்மாள் என்ற மனைவியும் பத்ரகாளி(29) சங்கீதா(27) ஆகிய 2 மகள்களும் கலைச்செல்வன்(28) என்ற ஒரு மகனும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory