» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கியதாக‌ நண்பர்கள் 2பேர் கைது!

ஞாயிறு 9, பிப்ரவரி 2025 11:55:47 AM (IST)

தூத்துக்குடியில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய அவரது நண்பர்கள் 2பேரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் ஆல்வின் மகன் அச்சுதன் (20), இவர் தனது நண்பர்கள் காமநாயக்கன்பட்டி மகிமை நகரை சேர்ந்த ராஜசேகரன் மகன் வரதராஜன் (27), தூத்துக்குடி திருவிக நகரை சேர்ந்த கருப்பசாமி மகன் கார்த்திக் (37) மற்றும் ஒருவருடன் பாளை., ரோடு ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பாலத்தின் கீழே அமர்ந்து மதுபானம் அருந்தினர்களாம்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அச்சுதனை 3பேரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப் பதிந்து வரதராஜ், கார்த்திக் ஆகிய 2பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


New Shape Tailors



Arputham Hospital




Thoothukudi Business Directory