» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூல் : போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு!

சனி 18, ஜனவரி 2025 9:18:23 PM (IST)

தூத்துக்குடியில் சென்னை, கோவை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் செலுத்தப்படுவதாக வந்த புகார்களை அடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் மற்றும் தொடர் விடுமுறைக்கு பின்பு பொதுமக்கள் வெளியூர்களுக்கு தாங்கள் வேலை பார்த்த பகுதி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் வெளியூர் செல்கின்றனர் இதற்காக தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலையத்தில் இன்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. வழக்கமாக சென்னைக்கு 1200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் சுமார் 2000 ரூபாய் வரையும், பெங்களூருக்கு 1100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில் 1800 ரூபாய் வரையிலும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்குஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டது 

கூடுதல் கட்டணம் வசூல் தொடர்பாக வந்த புகாரை தொடர்ந்து தூத்துக்குடி ஆம்னி பேருந்து நிலையத்தில்  வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் போக்குவரத்து ஆய்வாளர்கள் பெலிக்ஸ், பாத்திமா பர்வீன் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா மேலும் ஏர்காரன் வண்டியின் ஆர்சி புக் ஆகியவை முறையாக உள்ளதா என்பது குறித்து சோதனை செய்தனர்.


மக்கள் கருத்து

தூத்துக்குடிJan 18, 2025 - 10:51:45 PM | Posted IP 172.7*****

இப்போ எஸ்.ஆர்.எம் பஸ் இல்லை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory