» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊதிய உயர்வு கோரி கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்த சிகால் ஊழியர்கள்!

வியாழன் 7, நவம்பர் 2024 9:19:06 AM (IST)



தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு கோரி சிகால் பன்னாட்டு பெட்டக  நிறுவன பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்துள்னர். 

தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் கண்டெய்னர் டெர்மினல் நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை படிப்படியாக நிறுத்தியது.  தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்ற பணப்பலன்கள் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு ரிப்பணை கையில் கட்டிக் கொண்டும் இன்று பணிக்கு வந்துள்ளனர். உடனடியாக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory