» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு அலுவலர்கள் துரிதமாக செயல்பட வேண்டும் : கண்காணிப்பு அலுவலர்

புதன் 16, அக்டோபர் 2024 3:23:02 PM (IST)



அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய அலுவலர்கள் அனைவரும் துரிதமாக செயல்பட வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/முதன்மைச் செயலாளர், கோ.பிரகாஷ் அறிவுறுத்தினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 16.10.2024 பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/முதன்மைச் செயலாளர், ஆணையர் வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகம் கோ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஊரகவளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, சுகாதாராத் துறை, வருவாய்த் துறை, நெடுஞ்சாலைகள் துறை, கூட்டுறவுத் துறை, பொதுப்பணித்துறை (கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு), வனத்துறை, தூத்துக்குடி மாநகராட்சி, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மகளிர்த் திட்டம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, திறன் மேம்பாட்டுக் கழகம், பள்ளிகல்வித் துறை, ஆவின், கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, சிறப்பு திட்ட செயலாக்கம், பொதுவிநியோகத் திட்டம், நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், வேளாண் சந்தைப்படுத்துதல், குழந்தைகள் பாதுகாப்புத்துறை, சத்துணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உயர்கல்வித் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அனைத்து திட்டங்களும் பொதுமக்களுக்கு சென்றடைய அனைத்து அலுவலர்களும் துரிதமாக செயல்பட வேண்டும் என மாவட்ட கண்காணிப்புக அலுவலர்/முதன்மைச் செயலாளர், ஆணையர் வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிகம் கோ.பிரகாஷ், தெரிவித்துள்ளார்கள்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory