» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி!
வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:39:40 PM (IST)
தூத்துக்குடி டி.எம்.என்.எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி டி.எம்.என்.எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து முருகையா தலைமையில் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், நிலைய பணியாளர்கள் நிலைய எழுத்தர் சீ.திருலோகசந்தர், தீயணைப்பு ஓட்டுநர் அ.கற்பக பிரபு, தீயணைப்போர் சு.கருப்பசாமி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செய்முறை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு பயிற்சி கொடுத்தனர். மழை மற்றும் பெருவெள்ளம் காலங்களில் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு போலி ஒத்திகைப்பயிற்சி மற்றும் விளக்கவுரை மற்றும் செய்முறை செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர் செய்திருந்தார்.