» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.எம்.என்.எஸ். சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 8:39:40 PM (IST)



தூத்துக்குடி டி.எம்.என்.எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு அனைத்து பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி டி.எம்.என்.எஸ் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பதின்ம மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சிறப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து முருகையா தலைமையில் முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், நிலைய பணியாளர்கள் நிலைய எழுத்தர் சீ.திருலோகசந்தர், தீயணைப்பு ஓட்டுநர் அ.கற்பக பிரபு, தீயணைப்போர் சு.கருப்பசாமி வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு செய்முறை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு பயிற்சி கொடுத்தனர். மழை மற்றும் பெருவெள்ளம் காலங்களில் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு போலி ஒத்திகைப்பயிற்சி மற்றும் விளக்கவுரை மற்றும் செய்முறை செய்து காட்டப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் மற்றும் செயலாளர் உமரிசங்கர் செய்திருந்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory