» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருவிழாவில் பெண்களிடம் 7 பவுன் தங்க நகை பறிப்பு : மர்ம நபர்கள் கைவரிசை!

புதன் 18, செப்டம்பர் 2024 10:35:17 AM (IST)

தூத்துக்குடி அருகே கோவில் திருவிழாவில் பெண்களிடம் 7 பவுன் தங்க நகைகளை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூர் காளியம்மன் கோவிலில் கொடை விழா நடந்தது. இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி 3 பெண்களிடம் மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்துச் சென்று விட்டனர். 

இதில், குளத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சேது அம்மாள் (75) என்பவரிடமிருந்து  3பவுன், மேல தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி ஏலத்தாய் (60) என்பவரிடமிருந்து 2 பவுன், செல்லத்துரை மனைவி பெத்தம்மாள் (75) என்பவரிடம் 2பவுன் என மொத்தம் 7பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுவிட்டனர். 

இதுகுறித்து 3 பெண்களும் தனித்தனியாக குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory