» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூ மார்க்கெட் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் : போலீஸ் விசாரணை!
வியாழன் 19, செப்டம்பர் 2024 11:20:37 AM (IST)
தூத்துக்குடியில் பூ மார்க்கெட் அருகே கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு பூ மார்க்கெட் அருகே ஆண் சடலம் கிடப்பதாக மத்தியபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் அளித்த புகாரின் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.