» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பாபநாசம், மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:54:33 PM (IST)

பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். 

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வந்திருந்த விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர் மேலும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் ஆட்சியர் அலுவலகம் முன்பு எந்தவித போராட்டங்களுக்கும் அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பித்து இருந்ததை தொடர்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது இதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் இந்த விஷயத்திலா தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் 

இதேபோன்று தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவு வெயில் அடிப்பதால் ஏராளமான குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிநீர் பாசனப் பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டுள்ள வாழைப் பயிர்கள் மற்றும் வெற்றிலைக் கொடிக்கால் பூ விவசாயம் ஆகியவை பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

எனவே பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைகளில் 100 அடிக்கு மேல் தண்ணீர் உள்ள நிலையில் உடனடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் வடகால், தென்கால், மேல கால், கீழ கால் ஆகிய நான்கு கால்வாய்கள் வழியாக குளங்கள் நிரம்பும் வகையில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மழை வெள்ளத்தின் போது குளங்கள் முழுவதும் நிரம்பி உடைந்து நீர் கடலுக்குச் சென்று வீணானது அதேபோன்று இல்லாமல் இப்போது உடனடியாக தண்ணீர் திறந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூர்வாரும் பணி தீவிரம்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:33:10 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory