» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின பேரணி
வியாழன் 19, செப்டம்பர் 2024 10:50:56 AM (IST)
தூத்துக்குடியில் எம்பவர் இந்தியா சமூக சேவை அமைப்பு, மாவட்ட சுகாதாரத் துறை, இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தின பேரணி நடைபெற்றது.
பேரணியை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் கொடியசைத்து துவங்கி வைத்தார். எம்பவர் இந்தியா கௌரவ செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். தூத்துக்குடி மருத்துவ கல்லூரி முதல்வர் சிவகுமார், இந்திய மருத்துவ சங்க தலைவர் பூங்கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பேரணி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகளில் வழியாக சென்று நர்சிங் கல்லூரி வளாகத்தை சென்றடைந்தது. பேரணியில் ஏஸ்.ஏ.எச்., மற்றும் ஏவிஎம் நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டார்கள்,