» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு பேரணி: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:06:12 AM (IST)



தூத்துக்குடியில் "பெண் குழந்தைகளை காப்போம்" விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடியில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் காமராஜ் பெண்கள் கல்லூரியில் இருந்து "பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்ற விழிப்புணர்வு பேரணியை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார். 

இதில், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், வருவாய் கோட்டாட்சியர் பிரபு, மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, கல்லூரி முதல்வர் வான்மதி, மாவட்ட மகளிர் அதிகார மைய ஒருங்கிணைப்பாளர் நிவேதிதா, ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி செலின் ஜார்ஜ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூர்வாரும் பணி தீவிரம்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:33:10 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory