» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.  

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் சரண் (21), இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி ஆழ்வார் திருநகரியில் இருந்து ஆத்தூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

பாலத்தின் மீது வரும்போது திடீரென பைக் நிலை தருமாறி பாலம் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த சரண், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்திருநகரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தூர்வாரும் பணி தீவிரம்!

வியாழன் 19, செப்டம்பர் 2024 5:33:10 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital







Thoothukudi Business Directory