» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்ட விரோதமாக மது விற்ற 11பேர் கைது : 725 மதுபாட்டில்கள் பறிமுதல்
புதன் 18, செப்டம்பர் 2024 8:34:17 AM (IST)
தூத்துக்குடி நகர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி, நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் மேற்பார்வையில் தூத்துக்குடி நகர உட்கோட்ட தனிப்படை காவலர்கள் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 11பேரை கைது செய்தனர். அவர்கள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 725 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது