» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் விஸ்வபிரம்மா ஜெயந்தி விழா

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:31:30 PM (IST)



திருச்செந்தூர் மைலப்பபுரத்தில் உள்ள தமிழ்நாடு விஸ்வபிரம்ம சந்ததியர் பொது மடத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா நடந்தது. 

இதையொட்டி காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து உடன்குடி செல்வம் ஜூவல்லரி உரிமையாளர் சண்முகசுந்தரம் விஸ்வபிரம்ம ஐவர்ண அனுமன் கொடியேற்றினார். 

சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட திருச்செந்தூர் ஸ்ரீ சண்முகம் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் இசக்கிமுத்துகுமார், உடன்குடி விஸ்வபிரம்ம திருப்பணிக்குழு வானமாமலை பெருமாள் ஆகியோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

விழாவில், தலைவர் சங்கர வடிவேல், செயலாளர் சுப்பிரமணியன் (எ) மகாராஜன், பொருளாளர் சங்கர சுப்பிரமணியன், நிர்வாகக் குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விஸ்வபிரம்ம பொதுமண்டப நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory