» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

செவ்வாய் 17, செப்டம்பர் 2024 5:22:39 PM (IST)



எட்டையபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் பயணித்த 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக தூத்துக்குடிக்கு, நண்பர்கள் சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி (53), மதுரையைச் சேர்ந்த முகமது யாசின் ஆகிய 4 பேரும் காரில் வந்துள்ளனர்.

ரவிச்சந்திரன் காரை ஓட்டி சென்றுள்ளார். எட்டையபுரம் அருகே தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory