» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பா.ஜ.க. உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
செவ்வாய் 17, செப்டம்பர் 2024 4:27:21 PM (IST)
தூத்துக்குடியில் பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி வடக்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமை கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி தலைமையில் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் உஷா தேவி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டத் தலைவர் தேவகுமார், கிழக்கு மண்டல துணைத் தலைவர் லட்சுமி வேல்கனி, மண்டல பொதுச் செயலாளர்கள் வன்னிய ராஜன், சண்முகசுந்தரம், மாவட்ட துணைத் தலைவர்கள் தங்கம், பாலாஜி, விருந்தோம்பல் பிரிவு மாநில செயலாளர் பாலமுருகன், கிளை தலைவர் சங்கர், ஊடகப் பிரிவு மாவட்ட துணை தலைவர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.