» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:52:39 AM (IST)

தூத்துக்குடியில் மது குடிப்பதை தந்தை கண்டித்தால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி முத்தையாபுரம், தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ஐயப்பன் மகன் அஜித்குமார் (22), கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். மது போதைக்கு அடிமையானதால் சரியாக வேலைக்கு செல்ல மாட்டாராம். 

இதனால் அஜித்குமாரை அவரது தந்தை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory