» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதான சாலையில் கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்து விபத்து அபாயம்: சிபிஎம் கோரிக்கை!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:21:11 PM (IST)
தூத்துக்குடியில் பிரதான சாலைகளில் கழிவு நீர் தொட்டி மூடிகளை தரமாக அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் எம்.எஸ்.முத்து மாநகராட்சிக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டதின் கீழ் போடப்பட்ட சாலையான அம்பேத்கர் சிலையிலிருந்து தலைமை தபால் அலுவலகம் வரை கான்கிரிட் ரோடு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. இச்சாலையை திருச்செந்தூர் உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளுக்கும், நகரின் தென் பகுதிகளுக்கும் செல்லும் அத்தியாவசியான சாலையாக உள்ளது.
பேரூந்து உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சாலையில் போடப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியின் மூடி அடிக்கடி அதாவது தினமும் உடைந்து விபத்தை சந்திக்கும் நிலை உள்ளது. உறுதித் தன்மை மிக மோசமாக உள்ளதாக தெரிய வருகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு திருச்செந்தூர் ரோட்டின் இந்த பிரதான சாலையில் பொருத்தப்பட்டுள்ள கழிவு நீர் சேகரிப்பு தொட்டியின் மூடி உறுதியானதாகவும் (Heavy load resistance) தரமானதாகவும் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)

KumarSep 10, 2024 - 04:16:22 PM | Posted IP 162.1*****