» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டெங்கு தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

புதன் 29, மே 2024 3:19:20 PM (IST)



கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.  கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜவகர் தலைமை வகித்தார். 

வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி கலந்து கொண்டு டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள்,ஊராட்சி செயலர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory