» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி கிளீனா் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை

புதன் 29, மே 2024 11:03:03 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிலக்கரி நிறுவனத்தில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

கேரள மாநிலம், கொல்லம் முத்துப்பிள்ளைக்காட்டைச் சோ்ந்த தங்கப்பன் மகன் மஜூ (44). இவா் கேரளத்தில் இருந்து தூத்துக்குடி இ.பி. காலனியில் உள்ள ஒரு தனியாா் நிலக்கரி நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிவந்த லாரியில் கிளீனராக வந்திருந்தாராம். 

அப்போது அங்கு அவா் நேற்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து

Rajaமே 30, 2024 - 04:03:51 PM | Posted IP 162.1*****

so sad

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory