» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பூங்காவில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

செவ்வாய் 28, மே 2024 8:28:56 AM (IST)

தூத்துக்குடி பூங்காவில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி தலைமையிலான போலீசார் செல்சீனிகாலனி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அங்கு உள்ள பூங்காவில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில், அவர் வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவசூர்யா (19) என்பது தெரியவந்தது. அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசூர்யாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital


New Shape Tailors



Thoothukudi Business Directory