» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி தொகுதியில் 11 மணி நிலவரம்: 23.88 சதவீதம் வாக்குகள் பதிவு
வெள்ளி 19, ஏப்ரல் 2024 11:54:04 AM (IST)
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 23.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். தூத்துக்குடி தொகுதியில் பாராளுமன்ற மொத்தம் 1,624 வாக்குச்சாவடிகளில் 14,58,430 வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கவுள்ளனர்.
இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 23.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 35ஆயிரத்து 549பேர் இது வரை வாக்களித்துள்ளனர். அதிக பட்சமாக விளாத்திகுளம் தொகுதியில் 27.47 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
சட்டமன்ற தொகுதி வாரியாக 11 மணி நிலவரம்
கோவில்பட்டி 21.00
ஓட்டப்பிடாரம் 23.41%
ஸ்ரீவைகுண்டம் 24.07%
தூத்துக்குடி 22.87%
திருச்செந்தூர் 25.34%
விளாத்திகுளம் 27.42%
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 3 காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐக்கள், துணை இராணுவத்தினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர் காவல் படையினர், முன்னாள் இராணுவத்தினர், தீயணைப்பு படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் உட்பட 3500 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.