» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வாலிபரை தாக்கி 2.5 பவுன் செயின் பறிப்பு : ஒருவர் கைது - 6பேருக்கு போலீஸ் வலை!!

வியாழன் 2, மே 2024 12:03:59 PM (IST)

தூத்துக்குடியில் வாலிபரை தாக்கி 2.5 பவுன் செயினை பறித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6பேரை தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அணியாபர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ஆனந்தராஜ் (27). இவர் நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி முள்ளக்காடு கக்கன்ஜி நகரில் நடந்த கோவில் கொடை விழாவில் கலந்து காெண்டார். அப்போது மதுபோதையில் சிலர் ஆடிக் கொண்டிருந்தார்களாம். இதனை ஆனந்தராஜ் கண்டித்தாராம். 

இதனால் அந்த கும்பல் ஆனந்தராஜை அடித்து உதைத்து, அவர் அணிந்திருந்த 2.5 பவுன் செயினை பறித்துச் சென்று விட்டார்களாம். இதுகுறித்து அவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஈஸ்வரமூர்த்தி வழக்குப் பதிந்து கக்கன்ஜி நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துபாண்டி (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் 6பேரை போலீசார் தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory