» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வாகனத்தில் 6-வது முறையாக சோதனை

செவ்வாய் 16, ஏப்ரல் 2024 8:25:17 AM (IST)



தூத்துக்குடியில் 6-வது முறையாக கனிமொழி எம்.பி. வாகனத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி, முள்ளக்காடு, சவேரியார் புரம், அத்திமரப்பட்டி விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் தனது பிரசார வாகனத்தில் முத்தையாபுரம் பகுதிக்கு புறப்பட்டார். அப்போது, முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மாவட்ட கருவூல கண்காணிப்பாளர் சுப்பையா தலைமையில் கனிமொழி எம்.பி.யின் வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக கனிமொழி எம்.பி. வாகனத்தை விட்டு கீழே இறங்கி நின்றார்.

தொடர்ந்து பறக்கும் படையினர் வாகனத்தில் சோதனை செய்தனர். ஆனால் இதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. பின்னர் வாகனத்தை அதிகாரிகள் விடுத்தனர். தொடர்ந்து அவர் மற்ற பகுதிகளுக்கு பிரசாரம் செய்ய சென்றார். ஏற்கனவே கனிமொழி எம்.பி. வாகனத்தில் 5 முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் 6-வது முறையாக நேற்று நடந்த சோதனையால் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory