» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு!

சனி 13, ஏப்ரல் 2024 12:49:57 PM (IST)



தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து விளாத்திகுளம் பேரூராட்சி பகுதிகளில் அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களை உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சிவசாமி வேலுமணியை ஆதரித்து, விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட 3, 4, 7வது வார்டு பகுதிகளில் அதிமுகவினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தனர். 

இந்நிகழ்வில் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெருமாள், ஜெயலலிதா பேரவை வரதராஜ பெருமாள், விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கிளைச்செயலாளர் வேல்முருகன், மகளிர் அணி சாந்தி, பிரியா மற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory