» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன் விலை உயா்வு: மீனவா்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 11, பிப்ரவரி 2024 8:22:21 AM (IST)
தூத்துக்குடியில், வரத்துக் குறைவு காரணமாக மீன்கள் விலை உயா்ந்ததால் மீனவா்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடித் துறைமுகத்தில் சனிக்கிழமைகளில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள், வியாபாரிகளும் குவிவது வழக்கம். இதனால், சனிக்கிழமைகளில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் அதிகமாக கரைதிரும்பும். ஆனால், அண்மையில் புளியம்பட்டி புனித அந்தோணியாா் கோயில் திருவிழா காரணமாக ஆழ்கடல் மீனவா்கள் பலா் கடந்த 8ஆம் தேதிக்கு மேல்தான் கடலுக்குச் சென்றனா்.
எனவே, குறைந்த எண்ணிக்கையிலான படகுகளே நேற்று சனிக்கிழமை கரை திரும்பின. இதனால், மீன்வரத்து குறைந்திருந்ததால், விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 1,000, விளைமீன் ரூ. 500, ஊளி மீன் ரூ. 450, பாறை மீன் ரூ. 4,00, சூரை, கிழவாலை மீன்கள் ரூ. 200, நண்டு ரூ. 800, சாளை ஒரு கூடை ரூ. 1,200 என விற்பனையாகின. குறைவான மீன்கள் கிடைத்த கவலையிலிருந்த மீனவா்கள், அதிக விலை கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)

என்னதுFeb 11, 2024 - 09:55:03 AM | Posted IP 172.7*****