» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கொலை, கஞ்சா வழக்குகளில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
ஞாயிறு 17, செப்டம்பர் 2023 6:44:07 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த 16.08.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல் (52) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி பழையகாயல், தேவர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (27), சாத்தான்குளம் வீரஇடைகுடி பகுதியை சேர்ந்த வேல்பாண்டி மகன் செல்லப்பா (23), விளாத்திகுளம் சூரங்குடி சி.ஆர் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் கணேசமூர்த்தி (23) மற்றும் சாத்தான்குளம் முதலூர் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆண்டோ வின்ஸ்டன் (20) ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த 22.08.2023 அன்று கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு ராஜாப்புதுக்குடி பகுதியில் விற்பனைக்காக கண்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பாலசந்திரன் மகன் ஜான் அற்புத பாரத் (33) மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா வெங்கடராவ் மகன் சீக்கட்லா சட்டிபாபு (39) ஆகியோரை கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இவ்வழக்குகளில் கைதா லெட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி, ஆண்டோ வின்ஸ்டன், விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும் சீக்கட்லா சட்டிபாபு ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12பேர் உட்பட 123 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/hangsuici434i_1722058706.jpg)
டெய்லர் தூக்குபோட்டு தற்கொலை!
சனி 27, ஜூலை 2024 11:08:28 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/arrestimage_1722058405.jpg)
லாரி செட் உரிமையாளரிடம் பண மோசடி செய்தவர் கைது!
சனி 27, ஜூலை 2024 11:04:26 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/tuty_corpor_1522394831_1722058161.jpg)
தூத்துக்குடி மாநகர் முழுவதும் சுகாதாரப் பணிகள்: தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் வலியுறுத்தல்!
சனி 27, ஜூலை 2024 10:59:24 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/thiruvilakku4_1722057696.jpg)
மேலசண்முகபுரம் முனியசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
சனி 27, ஜூலை 2024 10:50:52 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimearrest_1722057120.jpg)
காதலிக்க மறுத்ததால் கல்லூரி மாணவி மீது தாக்குதல் : வாலிபர் வெறிச்செயல்!
சனி 27, ஜூலை 2024 10:42:26 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/emp34o43i_1722056525.jpg)
நுகர்வோர் ஆணையங்களை அணுக தயங்க கூடாது: ஆணைய உறுப்பினர்
சனி 27, ஜூலை 2024 10:30:48 AM (IST)
![](/npic_s/cee1f86a3b75f70e97b71ad01e821a80/tnpb/small/crimescene_police_1722056230.jpg)