» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி!!
வியாழன் 25, மே 2023 11:46:26 AM (IST)
தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜெயகணேஷ் (44), இவர் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் வாசல் அருகே கீரை வியாபாராம் செய்து வந்துள்ளார். இன்று காலை அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள போக்கஸ் லைட் கம்பத்தில் சாய்ந்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ஜெய்கனேஷ்க்கு திருமணமாகி மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா வழக்கில் வாலிபர் கைது: 1½ கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்!!
புதன் 31, மே 2023 4:46:25 PM (IST)

திமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்: முன்னாள் அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்!!
புதன் 31, மே 2023 4:30:55 PM (IST)

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

தமிழ்ச்செல்வன்மே 25, 2023 - 08:41:25 PM | Posted IP 172.7*****