» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி!!

வியாழன் 25, மே 2023 11:46:26 AM (IST)

தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட் அருகே மின்சாரம் பாய்ந்து வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் ஜெயகணேஷ் (44), இவர் தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் வாசல் அருகே கீரை வியாபாராம் செய்து வந்துள்ளார். இன்று காலை அவர் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அருகில் உள்ள போக்கஸ் லைட் கம்பத்தில்  சாய்ந்தாராம். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இறந்த ஜெய்கனேஷ்க்கு திருமணமாகி  மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். 


மக்கள் கருத்து

தமிழ்ச்செல்வன்மே 25, 2023 - 08:41:25 PM | Posted IP 172.7*****

இரவிலும் அண்ணா சிலை ஒளிர வேண்டும் என சிலையை சுற்றிலும் திமுகவினர் வைத்த விளக்குகளை சரியாக பராமரிக்காததால் வட்ட இரும்பு வேலியில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி பலி....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory