» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பராமரிக்க ஆளில்லை: முதியவர் தற்கொலை!!
வியாழன் 25, மே 2023 11:42:15 AM (IST)
சாத்தான்குளம் அருகே தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள வெள்ளரிக்காய் ஊரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இளங்கோ மகன் மந்திரமூர்த்தி (65). இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதன்பின் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். ஆனால் கடந்த ஆறு மதங்களுக்கு முன்பு மகனும் ஒரு விபத்தில் இறந்து விட்டாராம்.
இதனால் தன்னை பராமரிக்க ஆளில்லை என்ற ஏக்கத்தில் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)

king makerமே 25, 2023 - 01:44:30 PM | Posted IP 172.7*****