» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!

புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)

பசுவந்தனை அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கைள போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே மீனாட்சிபுரத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20 ஆம் தேதி இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் பொட்டு தாலி திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகியான ஜெய்சங்கர் (56) என்பவர் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீதாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory