» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்கள் கைவரிசை!!
புதன் 22, மார்ச் 2023 11:00:01 AM (IST)
பசுவந்தனை அருகே அம்மன் கோவிலில் பூட்டை உடைத்து 2 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கைள போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், பசுவந்தனை அருகே மீனாட்சிபுரத்தில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 20 ஆம் தேதி இரவு பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை கோயிலை திறக்க வந்தபோது பூட்டுக்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும், அம்மன் கழுத்தில் கிடந்த 2 பவுன் பொட்டு தாலி திருடு போயிருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகியான ஜெய்சங்கர் (56) என்பவர் அளித்த புகாரின் பேரில் பசுவந்தனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீதாராம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி பாலாஜி சரவணன் பங்கேற்பு!!
புதன் 31, மே 2023 4:07:25 PM (IST)

தூத்துக்குடியில் கலைஞரின் நூற்றாண்டு விழா : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!
புதன் 31, மே 2023 3:36:55 PM (IST)

தூத்துக்குடி பேருந்து பணிமனைக்கு கலைஞர் பெயர் : மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
புதன் 31, மே 2023 3:18:28 PM (IST)

மேலூர் ரயில் நிலையம் அருகில் புதியசாலை : அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு!
புதன் 31, மே 2023 2:43:46 PM (IST)

மது கடைகளை மூடக் கோரி உடுக்கை அடித்து தமிழ் மாநில காங்கிரஸ் நூதன போராட்டம்!
புதன் 31, மே 2023 12:52:14 PM (IST)

மனைவியை கத்தியால் குத்திய கணவர் : மது குடிக்க பணம் தர மறுத்ததால் வெறிச்செயல்!
புதன் 31, மே 2023 12:28:31 PM (IST)
