» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல்: 5 பேர் பலி!
சனி 13, ஏப்ரல் 2024 5:29:58 PM (IST)
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தில் மர்ம நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பொண்டி ஜங்ஷன் பகுதியில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் இன்று காலை வழக்கம்போல வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அப்போது வணிக வளாகத்திற்குள் நுழைந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக குத்தினார். இந்த கத்திக்குத்து தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்ட போலீசார் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கத்திக்குத்து தாக்குதலை நடத்தியது யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர்: மாஸ்கோவில் ரஷிய அரசிடம் இந்திய எம்.பி.க்கள் குழு விளக்கம்!
வெள்ளி 23, மே 2025 4:37:27 PM (IST)

சீனாவில் 650 ஆண்டுகள் பழமையான கோபுரம் இடிந்து விழுந்தது: சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி
வெள்ளி 23, மே 2025 12:20:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது அமெரிக்காவா? ஜெய்சங்கர் விளக்கம்!
வியாழன் 22, மே 2025 5:48:39 PM (IST)

காசாவில் மக்கள் உணவின்றி தவிப்பு! மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும்: போப் லியோ
வியாழன் 22, மே 2025 5:27:06 PM (IST)

இலங்கையில் இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு
புதன் 21, மே 2025 11:02:26 AM (IST)

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த தயார்: ட்ரம்புடன் பேசிய ரஷ்ய அதிபர் அறிவிப்பு!
புதன் 21, மே 2025 10:28:05 AM (IST)
