» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
புயல், வெள்ள மீட்பு பணிகளில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்: ராகுல் காந்தி
செவ்வாய் 5, டிசம்பர் 2023 3:41:45 PM (IST)
புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னையே வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. புயல் வெள்ள பாதிப்பால் தமிழகத்தில் சுமார் 8 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விடிய விடிய மீட்புப் பணிகளும் நடைபெற்று வருகிறது. கடந்த காலத்தோடு ஒப்பிடுகையில் சென்னையில் வெள்ளத்தின் தாக்கம் இந்த முறை பெருமளவு குறைந்திருக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்தியிருக்கும் அழிவு மற்றும் உயிரிழப்பு தொடர்பான செய்திகளைக் கேட்டு வேதனை அடைந்தேன். தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். மேலும் தமிழ்நாடு, ஆந்திர, ஒடிசா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் : அமித்ஷா பேட்டி!
வெள்ளி 11, ஏப்ரல் 2025 5:49:25 PM (IST)

தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சனி 29, மார்ச் 2025 4:07:11 PM (IST)

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)

தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)

2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

SURIYANDec 6, 2023 - 03:01:47 PM | Posted IP 172.7*****