» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள்: விஜய் அறிக்கை
திங்கள் 17, மார்ச் 2025 9:05:15 AM (IST)
டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தை நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள் என்றும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

அந்த சோதனையின் முடிவாக, அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் நடந்துள்ள கணக்கில் வராத பணமோசடி குறித்து பயன்படுத்தி உள்ள வார்த்தைகளைப் பார்த்தால், தி.மு.க. அரசு பற்றி ஓர் ஊழல் இலக்கியமே எழுதும் அளவிற்கு இருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதைப் பெருமையாகப் பறைசாற்றும் இதே அரசுதான் மக்கள் நலனைக் கெடுத்து, மதுவிற்கு அடிமையாக்கும் மது விற்பனையையும் செய்கிறது. அதே மதுவை வைத்துத் தான் முறைகேடும் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. எவ்வகையிலும் இதுபோன்ற முறைகேடுகளை ஏற்கவே இயலாது எனப் பொதுமக்களே கோபத்தில் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர். ஊழலில், காட்டாற்றையே உருவாக்க வல்லவர்கள் என்பதே தி.மு.க.வின் ஆட்சி அதிகார வரலாறு.
அமலாக்கத்துறை தற்போது கையில் அள்ளி இருப்பது ஆயிரம் கோடி ரூபாய் என்ற கையளவு நீரே. இன்னும் தீவிரமாக ஆழ்ந்து ஆராய்ந்தால், இந்த டாஸ்மாக் முறைகேட்டில் மட்டுமே சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும் என்றே தெரிகிறது. ஆகவே, இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முறையான, நியாயமான விசாரணைக்கு உட்படுத்தி, உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்.
மக்கள் ஒதுக்குவார்கள்
இந்த வேளையில், இன்னொன்றையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் மூலம் ஈட்டப்பட்ட பணம் தான் 200 தொகுதிகளை வெல்வோம் என்ற இறுமாப்புச் சூளுரையின் பின்னணியாக இருக்கும் போல.ஆனால், எத்தனை கோடிகளை கொட்டினாலும், இனி தி.மு.க. அரசின் ஊழல் வித்தைகள் செல்லாது. இவர்களை 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நிச்சயம் ஒதுக்கித் தள்ளுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
ஓMar 19, 2025 - 07:00:50 PM | Posted IP 172.7*****
அரசியல்வாதிகள் , பணக்கார புள்ளைகள் எல்லாம் மிஷனரி நாட்டுக்கு படிக்குதாமே ஏன் ??
ஓ அப்படியாMar 19, 2025 - 06:59:26 PM | Posted IP 162.1*****
இங்குள்ள இந்துக்கள், விஜய் முல்லையா, ஜட்டி வாசுதேவ், யோகா கோமாளி பாபா ராம்தேவ், போன்ற பணம் கொழுத்த அரசியல்வாதிகள் எல்லாம் மிஷனரி நாட்டுக்கு போய் செட்டில் ஆகுதாம் ஏன்? அந்த ஊரு பிடிக்குதாமே
ஒல்லா லூயா அவர்களேMar 19, 2025 - 06:56:02 PM | Posted IP 172.7*****
முட்டா சங்கிகள் இங்குள்ள மிஷனரிகளை கண்டால் கோபம் வரும் , வெளிநாட்டு மிஷனரிகளை கண்டால் இனிக்குதாம். போயா அங்குட்டு.
HALLULUYAMar 19, 2025 - 03:46:36 PM | Posted IP 162.1*****
மோடி எல்லா நாட்டிற்கும் செல்கிறார்,அரபு நாட்டிற்கும் செல்கிறார், இந்த மிஷனரிகள் டிரம்ப் பேரை சொல்லி கொண்டு அவரது காலை நக்கிக்கொண்டு, மோடி ஐ பற்றி குறை கூறுகிறார்கள்.
VIJAIIIIII அவர்களுக்குMar 19, 2025 - 10:52:52 AM | Posted IP 104.2*****
அது இருக்கட்டும்.அடிக்கடி மிஷனரி கிறிஸ்தவ நாட்டுக்கு செல்லும் மோடிக்கு என்ன வேலை?? மிஷனரி டிரம்ப் கால்ல நக்கவா ?
VIJAIIIIIIMar 17, 2025 - 01:14:06 PM | Posted IP 162.1*****
அது தெரிந்த விஷயம். ஆனால் மிஷனரியான உங்களால் கண்டிப்பாக வர முடியாது....காணாமல் போய்விடுவார்....
ஆனந்த்Mar 17, 2025 - 09:13:43 AM | Posted IP 162.1*****
நீ ஆண்டி ஆவது நிச்சயம்
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக அரசியலில் 2-ம் இடத்திற்குதான் போட்டி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சனி 29, மார்ச் 2025 4:07:11 PM (IST)

அமித்ஷா உடன் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
புதன் 26, மார்ச் 2025 5:06:29 PM (IST)

தி.மு.க.விற்கு மக்கள்மீது அக்கறை இல்லை: ஓ. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!
திங்கள் 24, மார்ச் 2025 12:41:28 PM (IST)

மும்மொழிக் கொள்கையில் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது: அன்புமணி குற்றச்சாட்டு!
புதன் 12, மார்ச் 2025 3:35:44 PM (IST)

எந்த மொழி மீதும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தனிப்பட்ட வெறுப்பு இருந்ததில்லை: முதல்வர்
திங்கள் 3, மார்ச் 2025 11:37:05 AM (IST)

மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது சந்தர்ப்பவாத அரசியல்: ராமதாஸ் குற்றச்சாட்டு!
வியாழன் 20, பிப்ரவரி 2025 4:07:47 PM (IST)

SOORIYANMar 26, 2025 - 02:41:14 PM | Posted IP 172.7*****